யாழ் கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளந்தெரியாத நபரின் சடலம் இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை. மேலதிக விசாரணைகள் மேலும், கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.